ஓய்வூதியர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றால் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) 78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழைப் பெறலாம்.
இந்த முறை ஓய்வூதியதாரர்களை அவர்களின் வீடுகளில் இருந்து ஸ்மார்ட்போன் கேமராவைப் பயன்படுத்தி முகத்தை ஸ்கேன் மூலம் அடையாளம் காண அனுமதிக்கிறது.