|| 40 வருடங்களாக இந்த இடத்தில் கர்த்தரை ஆராதிக்கிறோம். இதை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை, முறைப்படி குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மேலும் வாடகையும் செலுத்தப்பட்டு வருகிறது. பல மடங்கு கூட்டியபோதும் தவறாமல் வாடகை செலுத்தியிருக்கிறோம். இடப் பற்றாக்குறை காரணமாக நாங்கள் இங்கிருந்து விரைவில் வெளியேறவே விரும்புகிறோம். இந்நிலையில் இந்த வளாகத்தில் சிலர் முறைகேடாக நுழைந்து நுழைவாயிலில் சில குழப்பங்களை செய்து வருகின்றனர். அது சரியல்ல. நாங்கள் இதைவிட 10 மடங்கு விசாலமான இடத்தை சொந்தமாக வாங்கி ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம், அதற்கான அரசாங்க அனுமதி உள்ளிட்ட காரியங்களால் தாமதிக்கிறதே தவிர விரைவில் இங்கிருந்து நாம் அங்கே செல்ல இருக்கிறோம். ||
என்பதாக நேர்த்தியான ஒரு விளக்கத்தை அருமை போதகர் சாம் பி செல்லத்துரை அவர்கள் கொடுத்துள்ளார். ஒரு போதகர் ஒரு மேய்ப்பர் ஒரு குடும்பத் தலைவர் தனது மக்களுக்கான பொறுப்பை உடையவர் மற்றும் அவர்களைப் பாதுகாத்து பராமரிக்க கட்டளை பெற்றவர். அந்த முதிர்ச்சி அவருடைய இந்த விளக்கத்திலிருந்து நமக்குத் தெரிகிறது. இதனால் தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ள வைக்கப்பட்டுள்ளது.
200 வருடங்கள் பழமையான பாழடைந்த கல்லறை வளாகத்தைப் பண்படுத்தி அழகுபடுத்தி 40 வருடங்களாகப் பராமரித்த @revsamonline AFT Church இங்கிருந்து வெளியேறியபிறகு அந்த இடம் மீண்டும் பாழடையாமலும் வேறு வியாபார நிறுவனங்களுக்குச் செல்லாமலும் முக்கியமாக வடக்கன் ஆக்கிரமிப்பிற்குச் செல்லாமலும் இருந்திட #சிஎஸ்ஐ #சென்னை பேராயம் உறுதியளிக்கவேண்டும்.