கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் கடந்த மாதம் போலீசார் புகார் அளித்தார்.
இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக, நிலத்தின் உரிமையாளர் ஷோபாவின் தந்தை பிரகாசும் கரூர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்.#karur #Raid #cbcid #dinamalar