தமிழகத்தில் தொடரும் அரசியல் பிரமுகர்கள் கொலையால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 அரசியல் கொலைகள் நடந்துள்ளது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மே 4ம் தேதி நெல்லையில் வீட்டுக்கு பின்புறம் பாதி உடல் எரிந்த நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டி ஜெயக்குமார் கடிதம் எழுதியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.#politicalMurder #dinamalar