A little secret to rock your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Lalithambal shobanam

Follow
sri rajamathanki seva trust Madhu

Koil thirumakalam sri bayakchayambikai in thiruvarur dt அச்சத்தை அகற்றும் அற்புத திருத்தலம் கோயில் திருமாகாளத்தின் சிறப்புகள் பற்றி ஏ.எம்.ஆர் எழுதும் இக்கட்டுரை மூலம்
தெரிந்துகொள்வோம் தெய்வ தமிழகத்தின் ஆன்மீக சக்திக்கும்,தெய்வீக அழகிற்கும் காரணமாகத் திகழும் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றுதான் அரசலாற்றங்கரையில்திகழும் மிக மிக புராதனமான கோயில்திருமாகாளம் சோமயாக திருத்தலமாகும்.அம்பிகையின் சக்தியும். கருணையும்! அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ பயக்ஷயாம்பிகை,ராஜமாதங்கியாகும்,அதாவது தன்னை நாடிவரும் பக்தரகளின் பயம் எதுவானாலும் உடனுக்குடன் போக்கியருளும் தாய் என்பது பொருள்.கற்பனையான அச்சம் அடைக்க இயலாத கடன்களினால் ஏற்படும் பயம்,வணிகம் வியாபாரங்களில் மேன்மை அடையுமா அடையாதா என்ற பயம், நோய்களினால் ஏற்படும் பயம், ஆட்சி பீடத்தில் அமரும் அதிகாரிகளுக்கு அமர்ந்து இருக்கிற ஆட்சி பீடம் நிலைக்குமா நிலைக்காதா என்ற பயம்,உறவினர்களின்தொல்லை களினால் ஏற்படும் பயம்,பெண்கள் ஆன்களுக்கு வரன் அமையாததால், எங்கு திருமணமே ஆகாமல் நின்றுவிடுமோ என்ற பயம்,மேலதிகாரிகளுக்கு பிடிக்காத தால் எங்கே வேலை போய்விடுமோ என்ற பயம்,அறுவை சிகிச்சை நிபுனர்களுக்கு அறுவைசிகிச்சை நடைபெறும் சமயம் வெற்றி ஆகுமோ ஆகாதா என்ற பயம்,சங்கீதம் கலை சார்ந்த இசை ஞானியர்கள் நடிகர்களுக்கு தம் செய்யும் பணிகளில் வெற்றி காணமுடியுமா முடியாதா என்ற பயம், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பரிட்சையில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் பெறமுடியுமா பெறமுடியாதா என்ற பயம், செய்வினை தோஷம் ஏற்பட்டிருக்குமோ என்ற பயம், பெண்ணிற்கோ ,மனைவிக்கோ,மருமகளுக்கோ,சுகப்ரசவம் ஆகவேண்டுமென்ற பயம்,திருமண தம்பதியருக்கு குழந்தை பிறக்கலியே என்ற சதா ஏதாவது ஒரு பயத்திலேயே தற்காலத்தில் மனித பிறவியும் ஓடிக்கொண்டிருக்கிறது அல்லவா? இத்தனை பயத்தையும்,தனது கடைக்கண் பார்வையினாலேயே ஒரு நொடியில் போக்கி,, நமக்கு நிம்மதியை தந்தருள்கிறாள் அம்பிகை.தூர்வாச மகரிஷி பூஜித்து மகிழ்ந்தார் கவிஞர் காளிதாசர் இத்தல அம்பாளை கவிப்பாடி ராஜமாதங்கி சக்தியினால் புலவர்களில் தலைமை புலவராக ஆக்க செய்தாள் இத்தலம் மிக மிக தொன்மை வாய்ந்தது சுமார் 2000 ஆண்டு களுக்கு முற்பட்டது.அனைவரும் அவசியம் இந்த ஆலயம் சென்று தரிசிப்போமாக!! இந்த ஆலய இருப்பிடம் திருவாரூர்மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் கோயில்திருமாகாளம் கோயிலை அடையலாம் ஆலய தொடர்புக்கு 9486601401.

posted by boyzoel