மதுரை வீரன் தமிழ்நாட்டவர் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இருபெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்ந்தே காட்சியளிக்கிறார்.
வீரன் ஒரு உண்மையான கதாபாத்திரம் இவர் வீரத்திற்கும் காதலுக்கும் அடையாளமாக இருக்கிறார்.