மயிலேறும் மன்னவா
என் மனமேற இங்கு வா!
செயல் வீரன் அல்லவா
உன் சிறப்பெல்லாம்
சொல்லவா!
அறிவான அமுதம் நீ
அழகான குமுதம் நீ!
அறிவான அமுதம் நீ
என்றும் அழகான குமுதம் நீ!
நெறியோடு நடப்பவரை வாழ்த்து கின்ற தலைவன் நீ!
அகந்தையில்லா மனம் அமைத்தேன்
அன்பால் அரங்கமைத்தேன்!
புகழ் மிகுந்த உன் வரவை பொன் போல் நோக்கு கின்றேன்!
புகழ் மிகுந்த உன் வரவை நாளும் பொன் போல் நோக்கு கின்றேன்!
நூறு முகம் இருந்தாலும் ஆறுமுகம் போல் வருமா!
சீறி வரும் புயல் களையும் சிரித்தே அடக்கிடுவாய்!
சீறி வரும் புயல் களையும் நீ சிரித்தே
அடக்கிடுவாய்!