Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

மாநிலத்தை கட்டி காக்கும் லட்சணம் இதுதானா? | Seeman warns | NTK executive attacked | Seeman demand

Follow
Dinamalar

நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை சம்பவத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு தம்பி பாலசுப்ரமணியனின் படுகொலையும் ஒரு கொடும் சாட்சி.

எவரையும் கூலிப்படையினரை கொண்டு எளிதாக வெட்டிச் சாய்த்து விடலாம் என்றால், எங்கு இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்?
இதுதான் மாநிலத்தை கட்டிக் காக்கும் இலட்சணமா? வெட்கக்கேடு! இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்கப் போகிறோம்?

எங்குப் பார்த்தாலும் வன்முறை தாக்குதல், கொலை, சாதிய மோதல்கள், போதைப்பொருள் புழக்கம், ரவுடிகளின் அட்டூழியம், கூலிப்படை கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழகத்தின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது.#Seeman #NTK #executive #attacked #arrest

posted by happybodydh