It was never so easy to get YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Sivan thiruppalli eluchi - திருவாசகம் - திருப்பள்ளி எழுச்சி - திரைப் பாடகர் தீபன் சக்கரவர்த்தி

Follow
gopalakrishnan g

போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே !
புலர்ந்தது பூங்கழற்கு இணை துணை மலர் கொண்டு
ஏற்றி , நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும்
எழில் நகை கொண்டு, நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே !
ஏற்று உயர் கொடி உடையாய் ! எமை உடையாய் !
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

அதிகாலை, கவின் மிகு காட்சிகள் பொழுது புலர்ந்ததால் காணக்கிடைக்கின்றன ! கூவுகின்றன பூங்குயில்கள் ! கோழிகள் இயம்புகின்றன ! திருச் சங்கு முழங்குகின்றன ! விண்ணவர்கள் தொழ வருகின்றனர் !
தொழுகையர் அழுகையர் துவள்கையர் என தொண்டர்கள் உன் திருக்கோவிலில் குவிந்துளார்கள்! களி தருகின்ற தேனே ! கடலமுதே ! கரும்பே ! எமை ஆட்கொள எழுந்தருளே எம் இறையே ! என வான் கலந்த மாணிக்க வாசகர் நெஞ்சுருகப் பாடுகின்றார் !

தென்னாடுடை சிவபெருமானின் தெய்வத் தமிழ் திருப்பள்ளி எழுச்சிப் பாடலை , மெல்லிசை அரசர் ; திரைப்படப் பாடகர் தீபன் சக்கரவர்த்தி மெய் நிறைத்துப் பாடியுள்ளார் . கேட்டு மகிழ்வோம் ! சிவனருள் நிறையப் பெறுவோம் !

சைவம் வைணவம் : நமது இரு கண்கள் !

நம் வாழ்வுக்கு புதிய முதலாகவும் ; புதையலாகவும் ; பேரின்பப் பெட்டகமாகவும் ; பெறுதற்கரிய பரம் பொருளாகவும் என்றும் இருக்கும் தென்னாடுடைய சிவனாரின் திருப்பள்ளி எழுச்சிப் பாடலை தன் கனிந்த குரலில் திரைப்படப் பாடகர் தீபன் சக்கரவர்த்தி பொருளுணர்ந்து அனுபவித்துப் பாடியுள்ளார் !

கேளுங்கள்: மகிழுங்கள்: சிவத்தில் திளையுங்கள் நண்பரீர் !

Singer : Cini Singer : DEEPAN CHAKKARAVARTHI Music : Isaicharal G.GOPALAKRISHNAN M.A., Radhika Records Chennai 26 Supporting Team : Tvl. PRAVEEN , SANTHOSH , Purushothaman , Subramanyam , Rajalakshmi Punniya Moorthy , Thilagan , Guru NADHASWARAM Natchiarkoil N.R.P. RAVICHANDRAN MURALI SARAVANAN MANI PALANI B. A. R LAKSHMANAN Producer : V. Sudharsan, DIRECTOR G. G. KRISHNA RAJENDRAN

posted by drydrorsBlumsec